தெலங்கானாவில் புதிதாக 2,817 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,817 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்  10 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானாவில் புதிதாக 2,817 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி
தெலங்கானாவில் புதிதாக 2,817 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,817 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்  10 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றைய (புதன்கிழமை) நிலவரப்படி புதிதாக 2,817 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,33,406-ஆக அதிகரித்துள்ளது. 

தொற்றால் பாதிக்கப்பட்டு 32,537  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 2,611 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,013-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 74 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒருநாளில் மட்டும் 59,711 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 856-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.64 சதவிகிதமாக உள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com