தில்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடக்கம்

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 
AIIMS resumes OPD services a day after suspension
AIIMS resumes OPD services a day after suspension

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

கரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், புறநோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை வசதிகள் அனைத்தும் கரோனா படுக்கையாக மாற்றப்பட்டது. இதனால், புறநோயாளிகள் சேவை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, தற்போது பொது முடக்கத்தில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், கரோனா தீவிரம் குறைந்துள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவ தலைவர் டாக்டர் ஆர்த்தி விஜ் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com