ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,027 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 10 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ஜார்க்கண்ட்டில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 1,027 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,862-ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு 14,677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து புதிதாக 1,385 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 29,747-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 10 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 438-ஆக அதிகரித்துள்ளது'' என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.