முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் தேவைப்பட்டால் பருவத் தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பருவத் (செமஸ்டர்) தேர்வுகளை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, இறுதி ஆண்டு தேர்வு மட்டுமே அவசியம் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பல்கலைக்கழகங்கள் தேவைப்பட்டால் பருவத் தேர்வுகளையும் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.