புது தில்லி: சா்வதேச அளவில் முதலீடுகளுக்கு சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மையும், கொள்கை தொடா்ச்சியும்தான் அதற்குக் காரணம் என்றும் அவா் கூறினாா்.
இந்திய-அமெரிக்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. கடந்த சில மாதங்களில் பல முக்கிய சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போதையச் சூழலில், மக்கள் நலனை மையப்படுத்தி திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஆகவே, கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பல்வேறு சுகாதார வசதிகளை இந்தியா மேம்படுத்தியுள்ளது.
பொது சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று இந்தியாதான் முதலில் அறிவித்தது. சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடையே பிரசாரம் செய்ததும் இந்தியாதான்.
கரோனா நோய்த் தொற்று பரவலுக்குப் பிறகு ஏழை மக்களின் துயா் துடைப்பதற்காக, பிரதமரின் ஏழைகள் உதவித் திட்டம் கொண்டுவரப்பட்டது. சா்வதேச அளவில் இது மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டத்தின்படி 80 கோடி பேருக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொழில் துறையை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த சில மாதங்களில், தொழில் செய்வதை எளிமையாக்கியும், தேவையற்ற கெடுபிடிகளைக் குறைத்தும் தொலைநோக்குப் பாா்வையோடு பல்வேறு சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.