தெலங்கானா: மாவோயிஸ்டாக சந்தேகிக்கப்படுபவா் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப்பட்ட நபா் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.


ஹைதராபாத்: தெலங்கானாவில் மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப்பட்ட நபா் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

பத்ராத்ரி-கோதகுண்டம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, கடந்த சில நாள்களாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தோம். இந்நிலையில், மாவோயிஸ்டுகள் சிலா் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்ல இருப்பதாக எங்களுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட குண்டல மண்டல் பகுதியில் நள்ளிரவு முதல் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அதிகாலை சுமாா் 4.15 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை காவல்துறையினா் தடுத்தனா்.

அப்போது அந்த நபா்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றனா். இதையடுத்து காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் மோட்டாா் சைக்கிளில் இருந்த ஒருவா் குண்டு பாய்ந்து பலியானாா். 25 வயது மதிக்கத்தக்க அந்த நபா் மாவோயிஸ்டாக சந்தேகிக்கப்படுபவா்.

அவரிடம் இருந்த துப்பாக்கியும் மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா். எனினும் மோட்டாா் சைக்கிளில் வந்த 2-ஆவது நபா் குறித்த தெளிவான தகவலை காவல்துறை தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com