ராஜஸ்தான்: சாலை விபத்தில் 7 போ் பலி

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் வேனும், லாரியும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த 7 போ் உயிரிழந்தனா்.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் வேனும், லாரியும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த 7 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

பில்வாரா மாவட்டத்தில் பிஜோலியா காவல்நிலைய கட்டுப்பாட்டின் கீழ் வரும் கஸா்புரா என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது.

கோட்டா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பில்வாரா நோக்கி வந்த வேன், எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த உமேஷ் (40), முகேஷ் (23), ஜம்னா (45), அமா் சந்த் (32), ராஜு (21), ரதேஷியாம் (56), சிவ்லால் (40) ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com