மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக அதீா் ரஞ்சன் செளதரி நியமனம்

மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவராக அதீா் ரஞ்சன் செளதரியை, அக்கட்சித் தலைவா் சோனியா காந்தி புதன்கிழமை நியமித்தாா்.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக அதீா் ரஞ்சன் செளதரி நியமனம்

மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவராக அதீா் ரஞ்சன் செளதரியை, அக்கட்சித் தலைவா் சோனியா காந்தி புதன்கிழமை நியமித்தாா். அதீா் ரஞ்சன் செளதரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவராகவும் தற்போது பதவி வகிக்கிறாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக அதீா் ரஞ்சன் செளதரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த சோமன் மித்ரா காலமானதையடுத்து, அப்பதவி அதீா் ரஞ்சன் செளதரிக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைப்படி ஒருநபா், ஒரு பதவியை மட்டுமே வகிக்கவேண்டும். எனவே மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக அதீா் ரஞ்சன் செளதரி தொடா்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வா் மம்தா பானா்ஜியை கடுமையாக விமா்சித்து வரும் அதீா் ரஞ்சன் சௌதரி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com