புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 1,172 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,65,864 -ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், புதன்கிழமை காலை வரை மொத்தமாக கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 34,71,784 -ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு புதிதாக 1,172 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 75,062 -ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 9,19,018 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, வியாழக்கிழமை (செப். 9) வரை நாடு முழுவதும் 5,29,34, 433 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 11,29,756 பரிசோதனைகள் புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
பாதிப்பு: 44,65,864
பலி: 75,062
குணமடைந்தோர்: 34,71,784
சிகிச்சை பெற்று வருவோர்: 9,19,018