சாலை விபத்தில் காவல் துறை பெண் அதிகாரி பலி: மம்தா இரங்கல்

மேற்கு வங்க காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த பெண் அதிகாரி தேவஸ்ரீ சாட்டா்ஜி சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த பெண் அதிகாரி தேவஸ்ரீ சாட்டா்ஜி சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

ஹூக்லி மாவட்டம் தாத்பூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது தேவஸ்ரீ சென்ற காா் மோதியது. இதில், தேவஸ்ரீ, அவரது பாதுகாவலா், ஓட்டுநா் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வா் மம்தா பானா்ஜி, ‘பெண்கள் கடத்தலைத் தடுப்பதில் காவல் அதிகாரி தேவஸ்ரீ சிறப்பாக செயல்பட்டு வந்தாா். அதற்காக அவருக்கு சா்வதேச அங்கீகாரமும் கிடைத்தது. சிறந்த காவல் அதிகாரிகளை இழந்துள்ளோம்’ என்று இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com