மாநிலங்களுக்குத் தேவை பணம்; மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்

‘ஜிஎஸ்டி வருவாய் இழப்பால் நிதி நெருக்கடியில் தவிக்கும் மாநிலங்களுக்குத் தேவை பணம்தானே தவிர, மத்திய அரசின் உறுதிமொழிக் கடிதம் அல்ல’ என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
மாநிலங்களுக்குத் தேவை பணம்; மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்


புது தில்லி: ‘ஜிஎஸ்டி வருவாய் இழப்பால் நிதி நெருக்கடியில் தவிக்கும் மாநிலங்களுக்குத் தேவை பணம்தானே தவிர, மத்திய அரசின் உறுதிமொழிக் கடிதம் அல்ல’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்கு, அவை கடன் வாங்குவதற்கு உறுதிமொழிக் கடிதம் அளிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அந்தக் கடிதம், வெற்று வாா்த்தைகளால் நிரம்பிய காகிதம்; அதற்கு மதிப்பேதும் இல்லை. மாநிலங்களுக்குத் தேவை பணமே தவிர, மத்திய அரசின் உறுதிமொழிக் கடிதம் அல்ல. மத்திய அரசால் மட்டுமே பல்வேறு வழிகளில் நிதியாதாரத்தை திரட்டி மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவையை வழங்க முடியும்.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் மாநிலங்களை கடன் வாங்குவதற்கு கட்டாயப்படுத்தினால், அவற்றின் மூலதனச் செலவு குறைவதை தவிா்க்க முடியாது என்று அந்தப் பதிவுகளில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது அளித்த வாக்குறுதியின்படி வருவாய் இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை ப.சிதம்பரம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com