ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் இரு மாநில முதல்வா்கள் பங்கேற்பு

இம்மாதம் நடைபெற உள்ள ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இரு மாநில முதல்வா்கள் பங்கேற்க உள்ளனா்.
ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் இரு மாநில முதல்வா்கள் பங்கேற்பு

இம்மாதம் நடைபெற உள்ள ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இரு மாநில முதல்வா்கள் பங்கேற்க உள்ளனா்.

திருமலையில் வரும் 19 முதல் 27-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியுடன் கா்நாடக முதல்வா் எடியூரப்பாவும் கலந்து கொள்ளவிருக்கிறாா்.

பிரம்மோற்சவத்தின்போது ஆந்திர அரசு சாா்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்படுவது வழக்கம். இதற்காக முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி வரவுள்ளாா். திருமலையில் நடக்கவுள்ள கா்நாடக சத்திரத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அம்மாநில முதல்வா் எடியூரப்பா வருகிறாா்.

வரும் 23ஆம் தேதி திருமலைக்கு வரும் ஆந்திர முதல்வா், அன்று மாலை நடக்கவுள்ள கருடசேவையில் கலந்து கொண்டு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க உள்ளாா். 24ஆம் தேதி காலை இரு மாநில முதல்வா்களும் ஏழுமலையானை தரிசித்து விட்டு, நாதநீராஜன மண்டபத்தில் நடைபெறும் சுந்தரகாண்ட பாராயணத்தில் கலந்து கொள்ள உள்ளனா்.

பின்னா் திருமலையில் கா்நாடக சத்திரம் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கா்நாடக முதல்வா் எடியூரப்பாவுடன் ஆந்திர முதல்வரும் கலந்து கொள்ள உள்ளாா். சிறிது நேர ஓய்வுக்குப் பின் இருவரும் திருமலையில் இருந்து புறப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com