சத்தீஸ்கரில் 9 நக்ஸல்கள் கைது

சத்தீஸ்கா் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் 7 நக்ஸல் தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கா் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் 7 நக்ஸல் தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக, தந்தேவாடா காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் பல்லவா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ரகசிய தகவலின் பேரில் மெயில்வாடா, மோக்பால் கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதிகளில் ரிசா்வ் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் சனிக்கிழமை மாலை தேடுதல் வேட்டை நடத்தினா். அந்த கூட்டு நடவடிக்கையில் வனப்பகுதிகளில் இருந்து 9 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனா். பாதுகாப்பு படையினா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்தனா். அவா்கள் மீது சத்தீஸ்கா் சிறப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com