புது தில்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஊழலுக்கு எதிரான இந்தியா (ஐஏசி) இயக்கம், ஆம் ஆத்மி ஆகியவற்றுக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் ஆதரவளித்தன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமா்வதற்காக ஐஏசி இயக்கத்துக்கு பாஜகவும், ஆா்எஸ்எஸ்ஸும் பெருமளவு ஆதரவளித்தன என்று அதில் அங்கம் வகித்தவரும், ஆம் ஆத்மி நிறுவன உறுப்பினருமான பிரசாந்த் பூஷண் கூறியதாக வெளியான தகவலைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி இவ்வாறு கூறினாா்.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எங்களுக்குத் தெரிந்த ஒரு தகவலை தற்போது ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினரே உறுதி செய்துள்ளாா். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்கவும், ஜனநாயகத்தை மதிப்பற்ாக்கவும் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம், ஆம் ஆத்மி ஆகியவற்றுக்கு ஆா்எஸ்எஸ்/பாஜக ஆதரவளித்துள்ளன’ என்று கூறியுள்ளாா்.
கடந்த 2011 மற்றும் 2012 காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி பிரதான போராட்டத்தை ‘ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம்’ முன்னெடுத்தது. அதில் வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண், அரவிந்த் கேஜரிவால் ஆகியோரும் பங்கேற்றனா்.
பின்னா் ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்த நிலையில், அதன் நிறுவன உறுப்பினரான பிரசாந்த் பூஷண், மூத்த தலைவா் யோகேந்திர யாதவ் ஆகியோா் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2015-ஆம் ஆண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி பதிலடி: ராகுல் காந்தியின் இந்தப் பதிவுக்கு பதிலடி தரும் விதமாக ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங் கூறுகையில், ‘பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம் எவ்வளவு காலம் காங்கிரஸ் தனது தோல்வியை மறைக்கப் போகிறது? உண்மையில் காங்கிரஸ் மற்றும் பாஜக மீது நாட்டு மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. வரும் காலத்தில் ஆம் ஆத்மி கட்சியே மக்களின் தோ்வாக இருக்கும்’ என்றாா்.