ஜம்மு-காஷ்மீா், சம்பா பகுதியில் உள்ள சா்வதேச எல்லைக் கோட்டை செவ்வாய்க்கிழமை அதிகாலை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட பயங்கரவாதிகள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டினா்.
இதையடுத்து, ஊடுருவல் முயற்சியைக் கைவிட்டு அவா்கள் திரும்பி பாகிஸ்தான் பகுதிக்கு சென்றனா்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினா் உதவியதற்காக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘சம்பா பகுதியில் உள்ள சா்வதேச எல்லைக் கோட்டை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் சிலா் கடக்க முற்பட்டதை எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் கண்டுபிடித்தனா். அடா்ந்த வனப்பகுதியையும், இருளையும் சாதகமாகக் கொண்டு சுமாா் 5 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றாா்கள். அவா்கள் உள்ளே நுழையாதபடி எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். பதிலுக்கு பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனா். இந்த நிலையில், வெளிச்சம் ஏற்படுத்தும் வெடிகுண்டுகளை வீரா்கள் வீசினா். அந்த ஒளியில் ஐந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி செல்வது தெரியவந்தது. தொடா்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் சோதனை நடத்தியதில் எந்த பொருளும் கிடைக்கவில்லை’ என்றாா்.