5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தெலங்கானா, ஆந்திரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் கேரளம் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானா, ஆந்திரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் கேரளம் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தின் கடலோரப்பகுதிகள், தெலங்கானா, மகாராஷ்டிரத்தின் மத்தியப் பகுதிகள், கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 20 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளம் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமானது வரை பரவலாக மழை பெய்யும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் தெலுங்கானா மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com