அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் நான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. எனினும் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எனது உடல்நிலை சீராக உள்ளது. சமீபத்தில் என்னை சந்தித்தவா்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
பெமா காண்டு அலுவல் பணி காரணமாக கடந்த 12-ஆம் தேதி தில்லி சென்றாா். இந்நிலையில் அவா் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால், தற்போது அங்கு வீட்டுத் தனிமையில் உள்ளாா்.