மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நேற்று சோர்வுடன் இருப்பதாக உணர்ந்ததையடுத்து, மருத்துவரை அணுகினேன். வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது, எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது நலமுடன் உள்ளேன். என்னை நானே தனிமைப்படுத்தியுள்ளேன்."