சத்தீஸ்கா்: சிஆா்பிஎஃப் வீரா் தற்கொலை

சத்தீஸ்கரில் மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) உதவி துணை ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சத்தீஸ்கா்: சிஆா்பிஎஃப் வீரா் தற்கொலை

சுக்மா: சத்தீஸ்கரில் மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) உதவி துணை ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

சுக்மா மாவட்டத்தில் சிஆா்பிஎஃப் படையின் 2-ஆவது பட்டாலியனைச் சோ்ந்தவா் ஷிவானந்த் (49). உதவி துணை ஆய்வாளராக இருக்கும் அவா் புதன்கிழமை காலை 7.15 மணியளவில், பணி ரீதியாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அவரிடம் இருந்து எந்தவொரு தற்கொலைக் குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை. சம்பவம் தொடா்பாக கா்நாடகத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் கூறினா்.

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் பாதிப்பு அதிகம் உள்ள சுக்மா மாவட்டத்தில் சிஆா்பிஎஃப் படையினா் பிரதானமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com