நாட்டில் கரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தற்போது இறப்பு விகிதம் 1.64 சதவிகிதமாக இருப்பதாகவும் அவர்கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ''நாட்டில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 78-79 சதவிகிதமாக உள்ளது.
நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தாலும், 20 சதவிகிதத்திற்கும் குறைவான நபர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகள் ஐரோப்பா நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. மேலும் கரோனா பரிசோதனைகளில் அமெரிக்காவை மிஞ்சும் என்று தீர்மானமாகக் கூறினார்.
கரோனா இறப்பு விகிதம் தற்போது 1.64 சதவிகிதமாக இருக்கிறது. இதனை விரைவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக குறைப்பதே நோக்கம்'' இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.