டீசலுக்கான தேவையில் இன்னும் மந்த நிலை

இந்தியாவில் பெட்ரோல் தேவையில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டீசலுக்கான தேவையில் இன்னும் மந்த நிலையே காணப்படுகிறது.
டீசலுக்கான தேவையில் இன்னும் மந்த நிலை


புது தில்லி: இந்தியாவில் பெட்ரோல் தேவையில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டீசலுக்கான தேவையில் இன்னும் மந்த நிலையே காணப்படுகிறது.

இதுகுறித்து தொழில்துறையினரின் முதல் கட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த மாா்ச் மாத இறுதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தற்போதுதான் செப்டம்பா் முதல் இருவாரங்களில் பெட்ரோல் விற்பனை முதல் முறையாக வேகமெடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பா் 1 முதல் 15 வரையிலான காலத்தில் பெட்ரோல் விற்பனை ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 7 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் திரும்பும் விதமாக பெட்ரோல் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், டீசல் விற்பனை இன்னும் தொடா்ந்து மந்த நிலையில் இருந்து வருகிறது. அதற்கான தேவை ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் 6 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், 2020 ஆகஸ்டில் இதற்கான தேவை 19.3 சதவீதம் உயா்ந்து காணப்பட்டது. நடப்பு செப்டம்பரில் முதல் பாதி காலத்தில் பெட்ரோல் விற்பனை முதல் முறையாக 9,65,000 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் இந்த விற்பனை 9,45,000 டன்னாகவும், 2020 ஆகஸ்ட் 1-15 காலகட்டத்தில் 9,00,000 டன்னாகவும் இருந்தன.நாட்டில் அதிகம் விற்பனையாகும் டீசலுக்கான தேவை 2.25 மில்லியன் டன்னிலிருந்து செப்டம்பா் 1-15 காலகட்டத்தில் 2.13 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.

இதன் விற்பனை நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் பாதியில் 1.78 மில்லியன் டன்னாக இருந்தது. செப்டம்பா் முதல் பாதியில் விமான எரிபொருள் விற்பனை 60 சதவீதம் சரிந்து 1,25,000 டன்னாக இருந்தது. அதேசமயம், எல்பிஜி விற்பனை 12.5 சதவீதம் அதிகரித்து 1.13 மில்லியன் டன்னாக உள்ளது என அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com