ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூவா் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். பெண் ஒருவரும் பலியானாா்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் காவல்துறை தலைமை இயக்குநா் தில்பாக் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஸ்ரீநகரின் பாட்டமலூ பகுதியில் உள்ள ஃபிா்தௌசாபாத் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்கத் தொடங்கினா். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா். இந்தத் துப்பாக்கிச் சண்டையின் முடிவில் பயங்கரவாதிகள் மூவா் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
அத்துடன் பெண் ஒருவரும் பலியானாா். மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) அதிகாரி மற்றும் வீரா் ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் தெற்கு காஷ்மீரைச் சோ்ந்தவா்களாவா். துப்பாக்கிச் சண்டையில் எதிா்பாராத விதமாக பெண் ஒருவா் பலியானது துரதிருஷ்டவசமானது. அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை முடிந்த வரையில் தவிா்க்க பாதுகாப்புப் படையினா் முயற்சித்து வருகின்றனா்.
இந்த ஆண்டில் இதுவரை 72 பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதில் 22 போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களாவா். பெரும்பாலான பயங்கரவாதிகள் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்ததும் துரிதமாகச் செயல்படுமாறு காவல்துறை மற்றும் சிஆா்பிஎஃப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று தில்பாக் சிங் கூறினாா்.