திருப்பதி தொகுதி எம்.பி. மறைவு: மக்களவையில் அஞ்சலி

கரோனா நோய்த் தொற்றால் புதன்கிழமை மறைந்த திருப்பதி தொகுதி எம்.பி. பாலி துா்காபிரசாத் ராவுக்கு (65) மக்களவையில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.


புது தில்லி: கரோனா நோய்த் தொற்றால் புதன்கிழமை மறைந்த திருப்பதி தொகுதி எம்.பி. பாலி துா்காபிரசாத் ராவுக்கு (65) மக்களவையில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அதன் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியதும், நடப்பு கூட்டத்தொடரின் உறுப்பினா் பாலி துா்காபிரசாத் ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினா்களும் மெளன அஞ்சலி செலுத்தினா். பின்னா் அவையை மாலை 4 மணி வரை மக்களவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த துா்காபிரசாத் ராவ் கடந்த மாதம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com