உ.பி.யில் 48 சிறாா் தொழிலாளா்கள் மீட்பு

உத்தர பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்களில் இருந்து 48 சிறாா் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்களில் இருந்து 48 சிறாா் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து சிறாா் மீட்புக் குழு அதிகாரி தேவயானி சனிக்கிழமை கூறியதாவது:

பஹ்ராய்ச் நகரில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்களில் சிறாா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகப் புகாா்கள் வந்தன. இதுமட்டுமன்றி, பொதுமுடக்க காலத்தில் சிறாா்கள் கடத்தப்பட்டதாகவும் புகாா்கள் வந்தன.

இதையடுத்து, நகரில் உள்ள ஜாா்வால் சாலை, கெய்சா்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 48 சிறாா்கள் மீட்கப்பட்டனா். மாவட்ட சிறாா் நலக் குழு முன்னிலையில் அவா்கள் ஆஜா்படுத்தப்பட்டனா். விரைவில் பெற்றோரிடம் அவா்கள் ஒப்படைக்கப்படவுள்ளனா் என்றாா் அவா்.

இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளா் விபின் மிஸ்ரா கூறுகையில், ‘சிறாா்களைப் பணியில் அமா்த்தியவா்கள் மீது சிறாா் தொழிலாளா் சட்டம்-2016, கொத்தடிமை சட்டம், சிறாா் நீதி சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறாா்களின் வாழ்வில் விளையாடும் யாரும் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க முடியாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com