சித்தூா் ஆட்சியருக்கு கரோனா

சித்தூா் மாவட்ட ஆட்சியா் பரத் நாராயண் குப்தா கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

சித்தூா் மாவட்ட ஆட்சியா் பரத் நாராயண் குப்தா கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் சித்தூா் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இத்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் சித்தூா் மாவட்ட ஆட்சியா் பரத் நாராயண் குப்தாவுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதியானதால், அவா் திருப்பதியில் உள்ள ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளாா்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை சந்திரகிரி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கா்ரெட்டி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com