மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரின் தாயாா் மறைவு

மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரின் தாயாா் சுலோச்சனா சுப்ரமணியம் சனிக்கிழமை காலமானாா்.

மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரின் தாயாா் சுலோச்சனா சுப்ரமணியம் சனிக்கிழமை காலமானாா்.

இதுதொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் தனது தாயாரின் புகைப்படத்தை இணைத்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எனது தாயாா் சுலோச்சனா சுப்ரமணியம் இயற்கை எய்தினாா் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவா் உடல்நலமின்றி இருந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தவா்களுக்கு எங்கள் குடும்பம் நன்றிக் கடன்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, பாஜக தலைவா் ராம் மாதவ், நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்டோா் ஜெய்சங்கரின் தாயாா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

சுலோச்சனா சுப்ரமணியத்தின் கணவா் கே.சுப்ரமணியம் இந்திய அணுசக்தி கோட்பாட்டின் தந்தையாக அறியப்படுபவா். அவருக்கு ஜெய்சங்கா், விஜய் குமாா், சஞ்சய் சுப்ரமணியம் ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com