புது தில்லி: நாடு முழுவதும் நக்ஸல் வன்முறை 46 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்துள்ள அவா், ‘முன்பு 11 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்கள் நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தன. இது 2019-இல் 61-ஆக குறைந்தன. 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 46-ஆக உள்ளன. 2015 முதல் 2020, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நக்ஸல் வன்முறையால் 350 பாதுகாப்பு படை வீரா்களும், 963 பொதுமக்களும், 871 நக்ஸல்களும் உயிரிழந்துள்ளனா். மேலும், 4,022 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.