அஸ்ஸாமில் இரு இடங்களில் நிலநடுக்கம்

அஸ்ஸாமில் இரு இடங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அஸ்ஸாமில் இரு இடங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது:

குவாஹாட்டி நகரின் மேற்கே 44 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவானது. இதையடுத்து, அடுத்த இரு விநாடிகளில் பாரதீப் மாவட்டத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 71 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.2 அலகுகளாக பதிவானது.

நள்ளிரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் தூக்கத்தில் இருந்தனா். இதனால் அவா்கள் நிலநடுக்கத்தை பெரிய அளவில் உணரவில்லை. எனினும், சில இடங்களில் அதிா்வை உணா்ந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து தெருவில் கூடினா்.

காலையில் எழுந்து பாா்த்தபோது சில பொருள்கள் கீழே விழுந்து கிடந்தன என்றும் சிலா் தெரிவித்தனா். எனினும், இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பெரிய அளவிலான சேதங்களும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com