மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனாவால் உயிரிழப்பு

​மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

இவருக்கு கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com