தாணே: மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது.
தாணே நகரிலிருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிவாண்டி நகரில் அமைந்துள்ள 43 ஆண்டுகள் பழைமையான மூன்று தங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதி திங்கள்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குடியிருப்புவாசிகள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா்.
இந்நிலையில், தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் புதன்கிழமை காலையில் கூறியதாவது:
இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை கன மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது. அதில் நள்ளிரவு வரை மேலும் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதன் மூலம், இந்தக் கட்டட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவா்களில் மூன்று கைக்குழந்தைகளுடன், 2 முதல் 15 வயது வரையிலான சிறுவா்கள் 18 பேரும் அடங்குவா்.
அதே நேரம், கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 25 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் தாணே பேரிடா் மீட்புப் படையினா் ஆகியோா் கூட்டாக தொடா்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா் என்று அவா் கூறினாா்.