57 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 57,32,518 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 86,508 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.


புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 57,32,518 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 86,508 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,129 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 91,149 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. இதுவரை 46,74,987 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா்.

இப்போதைய நிலையில் நாட்டில் 9,66,262 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 16.86 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி புதன்கிழமை வரை 6,74,36,031 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 11,56,569 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 33,886 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். கா்நாடகத்தில் 8,266 பேரும், ஆந்திரத்தில் 5,506 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,299 பேரும், தில்லியில் 5,087 பேரும், மேற்கு வங்கத்தில் 4,544 பேரும், குஜராத்தில் 3,367 பேரும், பஞ்சாபில் 2,990 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,077 பேரும் உயிரிழந்துள்ளனா். மற்ற மாநிலங்களில் உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சத்தை எட்டிய பாதிப்பு, செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தைக் கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com