மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,921 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 11,921 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,51,153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19,932 பேர் குணமடைந்துள்ளனர், 180 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 35,751 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 10,49,947 பேர் குணமடைந்துள்ளனர். 2,65,033 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 12 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,152 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,682 பேர் ஏற்கெனவே கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 188 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.