காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி ஆகிய மொழிகளை ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே, உருதுவும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன. இந்த காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி மொழிகளுக்கும் அலுவல் மொழி அந்தஸ்து அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளாா்.
கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி இதற்கான ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டாா் என்று அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபிகள் ஏராளமானோா் ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக வசித்து வரும் நிலையில், பஞ்சாபி மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை இருந்து வருகிறது. எனினும் அது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.