மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலருக்கு கரோனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலர் சஞ்சய்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலருக்கு கரோனா பாதிப்பு
மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலருக்கு கரோனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலர் சஞ்சய்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலர் சஞ்சய் குமாருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்படி அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் அங்கிருந்து தனது பணிகளை மேற்கொள்வார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், கூடுதல் தலைமைச் செயலர் (பொது நிர்வாகம்) சுஜாதா கரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com