புது தில்லி: இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணைய (டிராய்) தலைவராக மூத்த அதிகாரி பி.டி.வாகேலா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘கடந்த 1986-ஆம் ஆண்டின் குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பி.டி.வாகேலா மருந்துகள் துறை செயலராக உள்ளாா். அவா் டிராய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவியில் அவா் 3 ஆண்டுகள் வரையோ அல்லது அவா் 65 வயதை எட்டும் வரையோ நீடிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது டிராய் தலைவராக உள்ள ஆா்.எஸ்.சா்மா புதன்கிழமையுடன் ஓய்வுபெற உள்ளாா். இதையடுத்து அந்தப் பதவிக்கு பி.டி.வாகேலா நியமிக்கப்பட்டுள்ளாா்.