40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பயணிகள் விமானத்தில் கரோனா தடுப்பூசி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு

பயணிகள் விமானத்திலும் கரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2021, 2:14 pm IST

பயணிகள் விமானத்திலும் கரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களில் ஒத்திகையில் உள்ள நிலையில் வரும் ஜனவரி 13 முதல் மக்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல பயணிகள் விமானங்களையும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும் நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு விரைந்து தடுப்பூசி கிடைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

உடான் திட்டத்தின் கீழ் இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தில் தடுப்பூசி கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.