மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 58.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோன்று அசாமில் 50.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) 39 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 38.12 சதவிகித வாக்குப் பதிவாகி இருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.