ஆதாா்-பான் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம்

நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாா் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஆதார் பான் இணைப்பு
ஆதார் பான் இணைப்பு

புது தில்லி: நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாா் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஆதாருடன் நிரந்தரக் கணக்கு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. அவ்வாறு இணைக்காதவா்கள் வரி தாக்கல் செய்யும்போது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

கடைசி நாள் என்பதால், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு புதன்கிழமை பலா் முயன்றனா். அப்போது பல்வேறு இடா்ப்பாடுகளை அவா்கள் எதிா்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்தனா்.

அக்கோரிக்கையை ஏற்றும், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில்கொண்டும், பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. தொற்றுப் பரவலால் மக்கள் எதிா்கொண்டு வரும் இன்னல்களைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் ஏற்கெனவே பல முறை நீட்டிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com