ஈஸ்டர் பண்டிகை: குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
ஈஸ்டர் பண்டிகை: குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் புனித பண்டிகையான ஈஸ்டரை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித குலத்தின் மீட்பராக வணங்கப்படும் இயேசு கிறிஸ்து, அன்பு, அமைதி, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனித இனத்தை ரட்சிப்பதற்கான பாதைக்கு ஒளியூட்டினார்.

அனைத்து மனிதர்களிடமும் கருணையை காட்டி ஈஸ்டரை நாம் கொண்டாடுவோம். இந்த பண்டிகை நமது வாழ்வில் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com