கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,553 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,553 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 4,553 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டது. 
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,15,155 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,060 போ் குணமடைந்து இன்று வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 9,63,419 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 
39,092 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 15 போ் இன்று உயிரிழந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 12,625 போ் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com