பெட்ரோல், டீசல் விலை இன்னும் சில நாள்களில் குறையும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி மாநிலங்களில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தற்போது பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. எதிர்வரும் நாள்களில் மேலும் விலை குறையும்” எனத் தெரிவித்தார்.
“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் மக்களைச் சென்றடைய அரசு விரும்புகிறது” எனக் குறிப்பிட்டார்.