2ஆவது தவணையாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக துணைக்குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 2ஆவது தவணையாக ஞாயிற்றுக்கிழமை வெங்கய்யா நாயுடு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில் அவர், தடுப்பூசிக்கு தகுதியுள்ள அனைவரையும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் நாட்டின் சில பகுதிகளில் தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.