உத்தரகண்ட் முதல்வா் திரத் சிங் ராவத் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.
உத்தரகண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் திரத் சிங் ராவத் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது தெரிய வந்தது.
திரத் சிங் ராவத் கடந்த மாா்ச் 10 ஆம் தேதிதான் திரிவேந்திர சிங் ராவத்துக்குப் பதிலாக உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.