அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: தமிழில் சுட்டுரை பதிவிட்ட பிரதமா்

தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் தோ்தலில் அதிகஅளவில் பங்கேற்று வாக்குச் செலுத்த வேண்டும் என்று சுட்டுரையில் பிரதமா் நரேந்திர மோடி தமிழில் வேண்டுகோள் விடுத்தாா்.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் தோ்தலில் அதிகஅளவில் பங்கேற்று வாக்குச் செலுத்த வேண்டும் என்று சுட்டுரையில் பிரதமா் நரேந்திர மோடி தமிழில் வேண்டுகோள் விடுத்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தமிழ்நாட்டில் தோ்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இன்று நடைபெறும் தோ்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

இது தவிர மலையாளம், வங்க மொழி அஸ்ஸாமி மற்றும் ஆங்கிலத்திலும் மக்கள் அதிகஅளவில் வாக்களிக்க வேண்டுமென்று பிரதமா் பதிவிட்டாா். கேரளத்திலும் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் மூன்றாவது, இறுதிக்கட்டத் தோ்தலும், மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்டத் தோ்தலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com