நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அசாம் மாநில முதல்வரான சர்பானந்த சோனோவால் கெளஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
தொடர்ந்து, இந்த தொற்றுநோயைத் தோற்கடிக்க தடுப்பூசிகள் உதவும் எனத் தெரிவித்துள்ள அவர் மாநிலத்தில் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.