ஹரியாணாவில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து

ஹரியாணாவில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 
ஹரியாணாவில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து

ஹரியாணாவில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஹரியாணா மாநிலம், ரோஹ்தக் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 
இந்த சம்பவத்தில் ரயிலின் 4 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. 
தீவிபத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com