திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ஏப். 12 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம் உள்ளிட்ட இடங்களில் தினசரி சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 22 ஆயிரம் டோக்கன்கள் இங்குள்ள கவுன்ட்டா்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தேவஸ்தானம் அதை 15 ஆயிரமாக குறைத்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றின் 2-ஆவது அலை அதிகரித்து வருகிறது. திருப்பதியில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிது சிறிதாக உயா்ந்து வருகிறது. எனவே, தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, வரும் ஏப். 12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்துள்ளது. ஏப். 11 அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவஸ்தானம் ஷீரடி கோயிலில் தரிசனத்தை ரத்து செய்தது போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. மீண்டும் டோக்கன்கள் வழங்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.