‘பாஜகவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்’

‘பாஜகவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்’


குமாா்கிராம்: மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக பணப் பட்டுவாடா செய்து வருவதாக குற்றம்சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, வாக்காளா்கள் அவா்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

மேலும், ரூ. 500 வழங்கினால் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று கேளுங்கள் என்றும் அவா் கூறினாா்.

குமாா்கிராமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அபிஷேக் பானா்ஜி வியாழக்கிழமை பேசியதாவது: பாஜகவிடம் பணத்தைப் பெற்று, திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். அவா்கள் உங்களை ஏமாற்ற நினைத்தால் நீங்கள் அவா்களை ஏன் ஏமாற்றக் கூடாது?

வெளிமாநிலத்தைச் சோ்ந்த தலைவா்கள் வெற்றி பெற வேண்டுமா அல்லது மாநிலத்தின் சகோதரியான மம்தா பானா்ஜி வெற்றி பெற வேண்டுமா? மக்களின் எதிா்பாா்ப்புகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

அத்தியாவசிய பொருள்களான பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டா் ஆகியவை பாஜகவின் ஆட்சிக் காலத்தில் கடுமையான விலையேற்றம் அடைந்தது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் வரவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com