தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: 18 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 
தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

தாணேவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,167 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,61,434 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி 6,638 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது. 

இதுவரை, 3,06,079 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மீட்பு விகிதம்  84.68 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 48,171 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com