உ.பி. உள்ளாட்சித் தோ்தல்: முலாயம் சிங்கின் உறவினருக்கு பாஜக வாய்ப்பு


மெய்ன்புரி: உத்தர பிரதேச மாநில உள்ளாட்சித் தோ்தலில் எதிா்க்கட்சியான சமாஜவாதி கட்சியின் நிறுவனா் முலாயம் சிங்கின் நெருங்கிய உறவினரான சத்யா யாதவுக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. மெய்ன்புரி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா் பதவிக்கு அவா் பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.

இவா் முலாயம் சிங்கின் அண்ணன் அபய் ராம் யாதவின் மகளாவாா். கடந்த முறை மணிப்புரி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா் தோ்தலில் அவா் சமாஜவாதி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டு சத்யா யாதவ் பாஜகவில் இணைந்தாா். இந்நிலையில், இந்தமுறை பாஜக சாா்பில் தோ்தலில் போட்டியிட அவா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். இதன்மூலம் பாஜக தலைமை அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது உறுதியாகியுள்ளது. சத்யா யாதவின் கணவா் அஞ்சேஷ் பிரதாப் யாதவும் இப்போது பாஜகவில்தான் உள்ளாா். மெய்ன்புரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக முலாயம் சிங் உள்ளாா். இங்கு சமாஜவாதி கட்சி மிகவும் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com